இலங்கை

முன்னாள் காதலனால் யாழ் யுவதி கடத்தப்பட்டது ஏன்? வெளியான தகவல்!

Published

on

முன்னாள் காதலனால் யாழ் யுவதி கடத்தப்பட்டது ஏன்? வெளியான தகவல்!

   கிளிநொச்சி  , இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் நேற்று (16) மாலை 6 மணியளவில் கடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் காதலனே யுவதியை கடத்தியமை அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் புன்னாக்லைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குறித்த யுவதி, கிளிநொச்சியிலுள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில், அங்கு வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் யுவதி தான் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்புகையில் வான் ஒன்றில் சென்ற குழுவினர் யுவதியை கடத்திச் சென்றமை ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

குறித்த யுவதியை கடத்திச் சென்றவர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் யுவதியின் முன்னாள் காதலன் என்றும் தெரியவந்துள்ளது.

முன்னாள் காதலன் யுவதியை, யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட யுவதி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தவேளை, யுவதியின் நண்பியை அழைத்த கடத்தல் குழு அந்த யுவதியை நண்பியின் பாரப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.

Advertisement

இந்நிலையில் நண்பி , யுவதியை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்து பரிசோதனைக்காக யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version