இலங்கை

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல்… இங்கிருந்துதான் பரவுகின்றதா?

Published

on

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல்… இங்கிருந்துதான் பரவுகின்றதா?

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பரவிவரும் எலிக்காய்ச்சல் நோயால் இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருவதாக யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இன்றைய தினம் (17-12-2024) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலே எலிக்காய்ச்சலை பரப்புகின்ற பற்றீரியா அந்த பிரதேசங்களில் இருக்கின்ற கால்நடைகளில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் அனுமதி கோரியிருந்தோம்.

அதனடிப்படையில் நாளையதினம் கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஒரு விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்கள் என பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற கால்நடைகளின் குருதி மாதிரிகளை பெற்று கொழும்புக்கு கொண்டு சென்று ஆய்வு செய்து, கால்நடைகளில் கிருமித் தொற்று இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த இருக்கின்றார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version