சினிமா
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்கவில்லை எனவும், அவருடன் வந்த நபர்தான் விலைக்கு கேட்டதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள புகழ்பெற்ற SEAGULLS உணவகத்தை, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பேசுபொருளானதை அடுத்து, இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
அதில் விக்னேஷ் சிவன் உடன் வந்த புதுச்சேரியை சேர்ந்த நபர் தான் SEAGULLS உணவகத்தை விலைக்கு கேட்டதாகவும், அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், சட்டமன்றத்தை விலைக்கு கேட்காமல் இந்த அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விமர்சித்தார்.
#JUSTIN
இயக்குநர் விக்னேஷ் சிவன் விவகாரத்தில் என்ன நடந்தது? புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி #Puducherry #Vigneshsivan #minister #LakshmiNarasimman #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/KDUw6SICjX
இந்த விவகாரம் குறித்து விக்னேஷ் சிவனும் தனது விளக்கத்தை வெளியிட்டு இருந்தார். அதில், புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான உணவகத்தை விலைக்கு கேட்டதாக பரவி வரும் செய்திகளுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். எனது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) படத்திற்காக புதுச்சேரி விமான நிலையத்தை பார்க்கவும் அங்கு படப்பிடிப்பை நடத்த அனுமதி கோரவும் சென்றேன்.
Also Read :
ரயில் பயணம் முதல் ஒபாமா அழைப்பு வரை.. தபேலா மன்னன் ஜாகிர் உசேனின் இசை பயணம்
மேலும், மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை காணச் சென்றேன். அப்போது என்னுடன் வந்த மேலாளர் அமைச்சருடன் உணவகத்தை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அது தவறுதலாக என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.