இலங்கை
இலங்கை நாடாளுமன்றம் நகைச்சுவையாளர்களால் நிரம்பியுள்ளதா? அரசியல்வாதி தகவல்
இலங்கை நாடாளுமன்றம் நகைச்சுவையாளர்களால் நிரம்பியுள்ளதா? அரசியல்வாதி தகவல்
இலங்கை நாடாளுமன்றம் நகைச்சுவையாளர்களால் நிரம்பியுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி Azath Saali தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (18-12-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அசாத் சாலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அதிக பெரும்பாண்மையுடன் வெற்றிப் பெற்ற கட்சியால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற சபாநாயகரின் கல்விதகைமை தற்பொழுது கேள்விக்குரியாகியுள்ளது.
அவர் பதவி விலகியதை தொடர்ந்து இன்று புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரின் பெயரின் முன்னாலும் கலாநிதி என்ற பட்டம் உள்ளது.
மேலும், 20 முதல் 30 பேரின் கல்விதகைமை பரிசோதிக்கப்பட்டு வருகின்றமையானது இலங்கை வரலாற்றிலே முதல்முறையாக நடைபெறுகின்றது” என்றார்.