இந்தியா

“எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – அமித்ஷாவின் அம்பேத்கர் பேச்சுக்கு விஜய் கண்டனம்

Published

on

“எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – அமித்ஷாவின் அம்பேத்கர் பேச்சுக்கு விஜய் கண்டனம்

“எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இவரின் இந்தப் பேச்சு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

Advertisement

மக்களவை இன்று காலை கூடியதும் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அம்பேத்கரின் புகைப்படத்தை ஏந்தியபடி அவர்கள் “ஜெய் பீம், ஜெய் பீம்” என முழக்கமிட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு, அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, தன்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு அம்பேத்கர் கடவுளுக்குக் குறைவானவர் இல்லை என்றார். அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் அமித் ஷா பேசி உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் அமித்ஷாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில், “அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், “யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

Advertisement

அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்…
அம்பேத்கர்… அம்பேத்கர்…
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும்…

Advertisement

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version