இலங்கை

கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

Published

on

கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இடைநிறுத்தவுள்ள இரண்டு கணக்குகளின் இருப்புத் தொகை சுமார் 200 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 53 (1) ஆவது பிரிவின்படி நேற்று (17) முதல் இடைநிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மேலும் நீடிக்க ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

கடந்த காலங்களில், இந்த விசாரணைகள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரின் சொத்துக்கள் பலவற்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்ககு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version