இலங்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து

Published

on

Loading

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து

  இன்று அதிகாலை (18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உடன் பேருந்து மோதியது.

Advertisement

இவ் விபத்து, A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

 விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பேரூந்தில் பயணித்த சாரதி உதவியார் உட்பட, Landmaster சாரதி மற்றும், உதவியாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version