இலங்கை

யாழில் இடம்பெறும் மணல் கொள்ளை ; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

Published

on

யாழில் இடம்பெறும் மணல் கொள்ளை ; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக பெருமளவான மணல் கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழியவளை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதும் மணல் கொள்ளையை தடுக்கவில்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது .

Advertisement

நள்ளிரவு நேரம் JCB இயந்திரம் கொண்டு டிப்பர்கள் மூலம் பாரிய மணல் கொள்ளையை மணல் கடத்தல் காரர்கள் தொடர்ந்து செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதைகளை அழித்து வீதிக்கு அருகில் வைத்தே பெருமளவான மணலை சூரையாடி செல்வதால் தற்பொழுது பாதைகளிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் மணல் மேடுகளை அழிப்பதால் கடல் நீர் குடிமனைகளுக்குள் வரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

Advertisement

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து எமது ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தமது கிராமத்தை பாதுகாத்து தருமாறும் பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version