இலங்கை

விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் படுகாயம்!

Published

on

விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் படுகாயம்!

மோட்டார் சைக்கிளும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஜூட் நிரோஷன் (வயது 50) உயிரிழந்துள்ளார்.

Advertisement

உயிரிழந்தவரின் 24  வயதுடைய மகள் காயமடைந்த நிலையில் மாரவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் மஹா வெவ நகருக்கு அருகில் தனது மகளுடன் உறவினர் வீட்டில் இருந்து வீடு திரும்பிய வேளையில் இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான வேன் குறிப்பிட்ட அரச நிறுவனத்திற்கு சொந்தமான வேன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

வேன் சாரதியின் நித்திரை கலக்கத்தால் வான், வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்து வீதியின் ஓரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version