இந்தியா

3 வகையான பொங்கல் தொகுப்பு.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

Published

on

3 வகையான பொங்கல் தொகுப்பு.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

Advertisement

கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சிறப்பு அங்காடியில் அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பண், பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருள் தருவதே கூட்டுறவு துறையின் நோக்கம். இத்துறையின் சார்பாக பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று வகையான சிறப்பு திட்டம் அறிமுகம் செய்துள்ளோம்.

பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது இனிப்பு பொங்கல் தொகுப்பு.

Advertisement

மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்டது கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு.

Advertisement

மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்டது பெரும் பொங்கல் தொகுப்பு.

Also Read :
இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில்… – வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த எச்சரிக்கை

கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சியடையவும் கூடுதலான வர்த்தகம் பெறவும் அவர்கள் கொடுத்த அறிவுரைப்படி இது போன்ற சிறப்பு தொகுப்பு விற்பனை செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த கூட்டுறவு பொங்கல் திட்டம் இன்று முதல் தொடங்கப்படும். கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் அவசியம். என்று அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியகருப்பண், கிறிஸ்துமஸ் என்றால் கேக், ரம்ஜான் என்றால் அசைவ உணவு, தீபாவளி என்றால் பலகாரம். பொங்கலை பொறுத்தவரை கரும்பு பிரதானம் அதோடு பொங்கல் வைப்பது சிறப்பு. சென்ற ஆண்டைப் போல பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்களில் கரும்பு இருக்கும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை எப்போது வழங்க தொடங்க வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version