இலங்கை
எரிபொருள் கொள்வனவில் தடை!
எரிபொருள் கொள்வனவில் தடை!
நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கைப் போக்குவரத்துச் சபை டிப்போக்களிலும் நேற்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானபத்தின் புதிய தீர்மானத்தின்படி, பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கலே இந்தநிலைமைக்குக் காரணம் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய புதிய நடைமுறையின்படி எரிபொருள் கொள்வனவுக்கு முதல்நாள் இணையம் மூலம் பணம் வைப்பிலிட வேண்டும் என்றும், அவ்வாறு வைப்பிலிடப்படும் பணத்தை பல வங்கிகள் இரவில் கணக்கில் சேர்ப்பதில்லை என்பதாலும் எரிபொருள் கொள்வனவில் தடை ஏற்பட்டது என்றும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (ப)