இலங்கை
சட்டவிரோத மணல் அகழ்வு; டிப்பரை துரத்திச்சென்று கைப்பற்றிய பொலிஸார்!
சட்டவிரோத மணல் அகழ்வு; டிப்பரை துரத்திச்சென்று கைப்பற்றிய பொலிஸார்!
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை சுமார் 40 கிலோமீற்றர் வரை துரத்திச் சென்று கைப்பற்றிய சம்பவம் ஒன்று நேற்று பருத்தித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தை பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸ் குழுவினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். அதனை மதிக்காது டிப்பர் வாகனம் நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது.
இந்நிலையில் சுமார் 40கிலோமீற்றர் வரை குறித்த டிப்பரை திரத்திச் சென்றுள்ள நிலையில் மேலும் தப்பிக்க முடியாத நிலையில் டிப்பர் சாரதி டிப்பரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதுடன் குறித்த ரிப்பரை பருத்தித்துறை பொலிஸார் கைப்பற்பற்றியுள்ளனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் நேற்றும் இன்றுமாக சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)