இலங்கை
சைப்ரஸில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை விடுவிக்க பேச்சுவார்த்தை!
சைப்ரஸில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை விடுவிக்க பேச்சுவார்த்தை!
சைப்ரஸில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.
சைப்ரஸில் பணிபுரியும் இந்நாட்டு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து சமூக பாதுகாப்பு நிதியாக பெறப்படும் பணம் அவர்களுக்கு மீள வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
இதன்படி உரிய பணத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.