இலங்கை

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காவு படகு சேவை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!

Published

on

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காவு படகு சேவை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!

யாழ். நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காவு படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் கடற்படையினரிடம் கோரியுள்ளார்.

ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் நோயாளர்காவு படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

Advertisement

இதன்போது, நெடுந்தீவிலிருந்து நோயாளர்களை கொண்டுவரும் சேவை ஹியூமெடிக்கா நிறுவனத்தின் நோயாளர்காவு படகுச்சேவை மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாதாந்தம் 15ஆம் திகதியிலிருந்து 20 நோயாளர்கள் வரை இவ்வாறு நோயாளர்காவு படகுச்சேவை மூலம் கொண்டு வரப்படுகின்றார்கள். இவ்வாறான சேவையை முன்னெடுக்கும் ஹியூமெடிக்கா நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும், கடற்படையினராலும் தற்போது நோயாளர்காவு படகுச்சேவை நடத்தப்பட்டு வருகின்றமையை குறிப்பிட்ட ஆளுநர் அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்ததுடன் கடந்த நவம்பர் மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக படகு சேவைகள் இடம்பெறாத நிலையில், நெடுந்தீவில் இருந்து மூன்று நோயாளர்கள் விமானப்படையினரின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version