இலங்கை

பென்னாலையில் வீடுடைத்து திருடியவர்களுக்கு விளக்கமறியல்!

Published

on

பென்னாலையில் வீடுடைத்து திருடியவர்களுக்கு விளக்கமறியல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வீடுடைத்து தளபாடப் பொருட்கள் பலவற்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நீண்ட நாட்களாக உடைத்து திருடியதாக கடந்த 16ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டநிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.

Advertisement

விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, இரண்டு சந்தேகநபர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version