இலங்கை

ரயில் பாதைக்கு அருகில் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

Published

on

ரயில் பாதைக்கு அருகில் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த அஞ்சல் ரயிலில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் கொட்டகலை கங்கைபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளசாமி ஜெயக்குமார் என்ற 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

இன்றையதினம் (19-12-2024) அதிகாலை 4 மணியளவில் இரவு அஞ்சல் ரயில் கொட்டகலை ரயில் நிலையத்தை வந்தடைந்ததுடன், மீண்டும் பதுளை நோக்கி இயங்கும் போது, ​​கொட்டகலை ரயில் நிலையத்தில் குறித்த நபர் இறங்க முயன்றபோது தவறி விழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனக் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதிகாலை நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் சாரதி கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதைக்கு அருகில் சடலமொன்றைக் கண்டுள்ளார்.

பின்னர் சடலத்தை கொட்டகலை ரயில் நிலையத்திற்குக் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

Advertisement

உயிரிழந்த நபர் கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டகலைக்கு செல்வதற்கான பயணச் சீட்டு வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version