இந்தியா

ஹெல்மெட் இல்லனா லைசென்ஸ் ரத்து.. அரசு அதிரடி! – எப்போது அமல் தெரியுமா?

Published

on

ஹெல்மெட் இல்லனா லைசென்ஸ் ரத்து.. அரசு அதிரடி! – எப்போது அமல் தெரியுமா?

Advertisement

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக, கட்டாயம் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு மட்டும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுவதால், மீண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் பேண்ட் வாத்தியம் இசைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் இருப்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கினால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 3 மாதங்கள் வரை ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, புதுச்சேரியில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு காவல்துறையினர், பூ கொடுத்து பாராட்டினர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version