விளையாட்டு

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பிரச்னையா? அஷ்வின் ஓய்வு அறிவித்ததன் பின்னணி என்ன?

Published

on

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பிரச்னையா? அஷ்வின் ஓய்வு அறிவித்ததன் பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. மீதம் 2 போட்டிகள் உள்ள நிலையில் இப்போதே தான் ஓய்வு பெறுவதாக அஷ்வின் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. பிரிஸ்பேனில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருப்பது இந்திய ரசிகர்களையும் தாண்டி சர்வதேச கிரிக்கெட் ரசிகர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ரோகித் சர்மா மற்றும் அஷ்வின் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே அஷ்வின் விளையாட அனுமதிக்கப்பட்டதாகவும், கூறப்படுகிறது.

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத அஷ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற்றார். மூன்றாவது போட்டியில் அஷ்வின் விளையாடவில்லை. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத சூழலில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஷ்வின் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே ரோகித் சர்மாவும் அஸ்வினும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் இடம் பெற்றிருந்தார். கடந்த 9 இன்னிங்ஸில் அஷ்வின் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.

இந்த தகவல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் 38 வயதாகும் அஷ்வின் சரியான நேரத்தில் தனது ஓய்வை அறிவித்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர் .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version