இலங்கை
தூய்மையான இலங்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி : வர்த்தமானி வெளியீடு!
தூய்மையான இலங்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி : வர்த்தமானி வெளியீடு!
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (19) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பரிசோதகர் ஜெனரல் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உட்பட 18 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நாட்டு மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலம் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய பணியைத் தொடங்குவதுடன், மாற்றும் முன்முயற்சியையும் தொடங்குவதே இதன் நோக்கங்களாகும்.
சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மை மற்றும் அரசு இயந்திரங்களை வலுப்படுத்துவதற்கு மாற்றியமைக்கும் முன்முயற்சி தேவைப்படுவதால், இந்த இலக்குகளை அடைவதே மற்றொரு நோக்கமாகும்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மையான இலங்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.