இந்தியா

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாக்குறீங்க? – முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்

Published

on

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாக்குறீங்க? – முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்

Advertisement

கோவை சுங்கம் பகுதியில் மறைந்த முன்னாள் எம்.பி. இரா.மோகன் இல்லத்தில் அவரது குடும்பத்தாரை சந்தித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கடந்த 10 ஆம் தேதி இரா.மோகன் உயிரிழந்தார். அன்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் இரண்டு நாள் கள ஆய்வுக்கு வந்திருந்த முதல்வர் சென்னை திரும்பும் முன் கோவையில் மோகன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இரங்கல் தெரிவித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர் முன்னாள் எம்.பி. இரா.மோகன். சாதாரண பொறுப்பில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர். அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்துள்ளேன்.

ஈரோட்டில் கள ஆய்வு நடத்தியுள்ளேன். கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது. ஈரோட்டின் கள ஆய்வு, வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கினை தாண்டி வெற்றி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ராகுல் காந்தி, தன் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு திமுக கூட்டணி வசமாகும். இந்தியா கூட்டணி வசமாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்து பேசி முடிவு செய்வோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரு கொடுமையான சட்டம். ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து அம்பேத்கர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.

அப்போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நன்றாக பார்க்கிறேன்” என சிரித்தபடி பதில் கூறிவிட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version