இலங்கை
நெடுந்தீவு கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
நெடுந்தீவு கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இம்மாதம் 8ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
8ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களது வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவரையும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டார்.