இலங்கை

மூடப்படும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள்

Published

on

மூடப்படும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள்

நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தற்பொழுது ஒரு மாத காலமாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக  தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது ஒரு கிலோ தேங்காய் 200 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதன் காரணமாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஆயிரம் ரூபாய்க்கும் பெற முடியாத நிலையில் உள்ளதாகவும்இ தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் தமது வாழ்வாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் பண்டிகைக்காலம் ஆரம்பமாகும் பொழுது தமக்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக இரவு பகலாக எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.  தற்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தை செலவழித்து இயந்திரங்கள் பொருத்தி தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்பொழுது பல தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடும் நிலையில் காணப்படுவதாகவும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version