இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் களேபரம்; காவலாளி நையப்புடைப்பு!

Published

on

யாழ் போதனா வைத்தியசாலையில் களேபரம்; காவலாளி நையப்புடைப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர், வைத்தியசாலை காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) இடம்பெற்றது.

மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை, பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டதாக கூறி காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

Advertisement

இதையடுத்து குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதேசமயம் காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் கைதுசெய்யப்படுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version