உலகம்
இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் ஜோ பைடன்!
இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் ஜோ பைடன்!
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்ற நிலையில் ஜனவரி 12ஆம் திகதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இத்தாலி செல்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதல் ஜனவரி 12ஆம் திகதி வரை ரோம் நகருக்குச் செல்ல உள்ளார் .
மேலும் அதிபர் ஜோ பைடன் ஜனவரி 10ஆம் திகதி அன்று போப் பிரான்சிசை சந்தித்து உலகம் முழுவதும் அமைதியை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதிப்பார் என தெரிவித்துள்ளது.
ஜனவரி 12ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]