இலங்கை

தமிழர் பகுதியில் கிராமசேவகர் நையப்புடைப்பு

Published

on

தமிழர் பகுதியில் கிராமசேவகர் நையப்புடைப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பிற்குள்ளானவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

நேற்று (20) பிற்பகல் வேளை இச்சம்பவம் நாசீவன் தீவு துறையடியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட கிரம சேவகர் தெரிவிக்கும் போது,

பிரதேச வாசி ஒருவர் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றினுள் அத்துமீறி காணியை சுற்றி வேலி அமைத்திருந்த தகவல் அறிந்து தாம் நேரில் சென்று அதனை அகற்றுமாறு கூறியபோது அவ்விடத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

Advertisement

குறித்த காணி விடயம் தொடர்பாக மேற்படி நபர் இன்று தமது அலுவலகத்திற்கு வருகை தந்து முரன்பாட்டில் ஈடுபட்டதாகவும் இதன்போது இருவருக்குமிடையில் கருத்துமுரன்பாடு ஏற்பட்டுள்ளாக அவர் தெரிவித்தார்.

பின்னர் தமது வெளிக்கள கடமை நிமித்தம் வெளியில் சென்றபோது குறித்த நபர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் கம்பு, பொல்லுகள் சகிதம் வந்து தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.

இதன்போது சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சிலர் தம்மை அவர்களிடமிருந்து பாதுகாத்தாக மேலும் அவர் தெரிவித்தார்.

Advertisement

சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version