இந்தியா

மகளுக்கு நடந்த அநீதி… குவைத்திலிருந்து வந்து பலி தீர்த்த தந்தை…

Published

on

மகளுக்கு நடந்த அநீதி… குவைத்திலிருந்து வந்து பலி தீர்த்த தந்தை…

மகளுக்கு நடந்த அநீதி… குவைத்திலிருந்து வந்து பலி தீர்த்த தந்தை…

Advertisement

தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு போலீசாரிடம் நியாயம் கிடைக்காததால் விரக்தியடைந்த தந்தை, குவைத்தில் இருந்து இந்தியா திரும்பி மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்பட்ட நபரைக் கொன்றுவிட்டு மீண்டும் குவைத்துக்கு பறந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அன்னமய்யா மாவட்டத்தில் நடந்த கொலைச் சம்பவம் ஆந்திர மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த ஆஞ்சநேய பிரசாத், தனது 12 வயது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் குவைத்தில் இருந்து இந்தியா வந்து சம்பந்தப்பட்ட நபரைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டுள்ளார்.

குவைத்தில் இருந்து இந்தியா வந்த ஆஞ்சநேய பிரசாத், குற்றவாளி என்று கூறப்பட்ட நபரைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு மீண்டும் குவைத்துக்கே சென்றுள்ளார்.

Advertisement

அன்னமையா மாவட்டம், ஓபுலவாரிபள்ளி மண்டலம், மங்கம்பேட் கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சநேய பிரசாத், குவைத்தில் 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். குவைத்தில் பணிபுரிந்து வரும் அவர் “பிரசாத் குவைத்” என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

திருமணத்திற்குப் பிறகு, ஆஞ்சநேய பிரசாத் தனது மனைவியை குவைத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவர் தனது குழந்தையை தனது மாமியாரின் பொறுப்பில் விட்டுவிட்டு, அவ்வப்போது அவர்களுக்குப் பணம் அனுப்பி உதவி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு, தனது அத்தையின் நிதி நிலைமை மோசமடைந்ததால், ஆஞ்சநேய பிரசாத் அவர்களையும் குவைத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

Advertisement

இதையடுத்து, தனது 12 வயது மகளை தனது மனைவியின் தங்கையின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். லட்சுமி மற்றும் அவரது கணவர் வெங்கடரமணன் ஆகியோர் ஆரம்பத்தில் குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொண்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள், அவளைப் பராமரிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, குவைத்தில் இருந்து அன்னமய்யா மாவட்டத்திற்குச் சென்ற குழந்தையின் தாய், லட்சுமியின் மாமா தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததைக் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து தாயும், மகளும் ஓபுலவாரிபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும், போலீசார் குற்றவாளிகளை எச்சரித்து விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

காவல்துறையிடம் நியாயம் கிடைக்காததால் மனமுடைந்த ஆஞ்சநேய பிரசாத், பிரச்சனையை கையில் எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து, கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, குவைத்தில் இருந்து இந்தியா வந்த ஆஞ்சநேய பிரசாத், குற்றவாளி என்று கூறப்படும் நபரை இரும்பு கம்பியால் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அதே நாள் மாலை குவைத்துக்குத் திரும்பியுள்ளார்.

கொலை குறித்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசாருக்கு ஆரம்பத்தில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஆஞ்சநேய பிரசாத் தனது யூடியூப் சேனலில் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய வீடியோவை வெளியிட்டு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisement

இதையடுத்து, ஆஞ்சநேய பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் நீதி அமைப்பு, காவல்துறையின் செயலற்ற தன்மை மற்றும் மனித உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version