இலங்கை

குயின் போயோங் சபாநாயகரை சந்தித்தார்!

Published

on

குயின் போயோங் சபாநாயகரை சந்தித்தார்!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவி குயின் போயோங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற ஒத்துழைப்பு, நிலைபேறான அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம், தொழில்கள் மற்றும் பலதரப்பு ஈடுபாடுகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

Advertisement

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் சீனாவின் உறுதிப்பாட்டுடன் உள்ளதாக குயின் போயோங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரஸ்பர அபிவிருத்தி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனாவின் தயார் நிலையையும் குயின் போயோங் வலியுறுத்தியுள்ளார்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version