இலங்கை

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை!…கம்பஹாவில் அதிர்ச்சி சம்பவம்

Published

on

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை!…கம்பஹாவில் அதிர்ச்சி சம்பவம்

கம்பஹா மாவட்டம், கிரிந்திவெல – வல்கம்முல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (21-12-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Advertisement

குறித்த சம்பவத்தில் திம்பிரிகம, கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொலை செய்யப்பட்ட நபர் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்திருந்த காணியில் இருந்த காவலாளி ஒருவரே இக்கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

சந்தேக நபர் கொலையை செய்துவிட்டு உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பியோடியுள்ளார்.

மேலும், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version