இலங்கை

யாழில் அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

Published

on

யாழில் அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க இளையோர் வலையமைப்புக்களுக்கு வழிகாட்டல்” என்ற தலைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டிலும் SOND நிறுவனத்தின் உதவி ஏற்பாட்டிலும் இளையோருக்கான செயலமர்வு ஒன்று நேற்றையதினம் (21) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

இதன்போது வளவாளராக பிரபல ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான கலாவர்சினி கனகரட்ணம் இணைந்திருந்தார்.

Advertisement

இதன்போது அரசியல் கல்வியறிவு, வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்கள், இளைஞர்களுக்கான ஒதுக்கீடு மற்றும் தேர்தலில் பங்கேற்பதற்கான தேவை, செயலில் ஈடுபாடு மற்றும் உத்திகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இளைஞர்கள் ஒதுக்கீடு மற்றும் தேர்தல்/அரசியலில் பங்கேற்பது குறித்த பிரச்சாரங்கள்,பிரச்சார நிதி மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறாக பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இச் செயலமர்வில் பயனாளர்களாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  (ப)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version