இலங்கை

வவுனியாவில் விடுதியொன்றில் மோசமான செயலில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் சிக்கினர்!

Published

on

வவுனியாவில் விடுதியொன்றில் மோசமான செயலில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் சிக்கினர்!

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

வவுனியா மாவட்ட மது ஒழிப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், சுந்தரபுரம், குழுமாட்டு சந்தி, கல்மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 – 30 வயதுடைய பெண்களே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version