இலங்கை

2024 ஆம் ஆண்டுக்கான சகவாழ்வு பணிக்காக இலங்கை வந்துள்ள சீன கப்பல்!

Published

on

2024 ஆம் ஆண்டுக்கான சகவாழ்வு பணிக்காக இலங்கை வந்துள்ள சீன கப்பல்!

2024 ஆம் ஆண்டுக்கான சகவாழ்வு பணியின் ஒரு பகுதியாக சீனாவுக்கு சொந்தமான ‘பீஸ் ஆர்க்’ என்ற மருத்துவமனை கப்பல் நேற்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 

 இந்த கப்பல் சீன கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனை கப்பல் ஆகும்.

Advertisement

இந்த கப்பலில் அறுவை சிகிச்சை அரங்குகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகள் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. 

 இந்த கப்பல் இந்த ஆண்டு ஜூன் மாதம் ‘2024 சகவாழ்வு பணிக்காக’ சீனாவின் ஜெர்ஜியாங் மாகாணத்தில் இருந்து புறப்பட்டது.

குறித்த கப்பல் இலங்கையில் உள்ள மக்களுக்கு  இலவச மருத்துவ சேவைகளை வழங்குகிறது, மேலும் அதன் மேம்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் தொழில்முறை பணியாளர்கள் இந்த காரணத்திற்காக முழுமையாக பங்களிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version