உலகம்

TikTok அணுகலை முடக்க முடிவு செய்துள்ள அல்பேனிய அரசாங்கம்!

Published

on

TikTok அணுகலை முடக்க முடிவு செய்துள்ள அல்பேனிய அரசாங்கம்!

அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

 இந்த தடை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

 அல்பேனியாவில் கடந்த மாதம் ஒரு பள்ளியில் 14 வயது மாணவன் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவமே இந்த TikTok ஒடுக்குமுறைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.

Advertisement

இருப்பினும், முன்மொழியப்பட்ட TikTok தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கத்தை எதிர்பார்ப்பதாக TikTok கூறியது. 

 கொலை செய்யப்பட்ட 14 வயது பள்ளி மாணவனோ அல்லது கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபரோ TikTok கணக்குகளை வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று TikTok கூறுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version