இலங்கை
இருமடங்காக உயர்ந்துள்ள பாடசாலை உபகரணங்களின் விலைகள் : ஆதங்கத்தில் பெற்றோர்!
இருமடங்காக உயர்ந்துள்ள பாடசாலை உபகரணங்களின் விலைகள் : ஆதங்கத்தில் பெற்றோர்!
பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
சில பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பள்ளி உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.