இலங்கை
இலங்கையில் பண்டிகையை முன்னிட்டு மேலும் 50 விசேட பேருந்துகள் சேவையில்!
இலங்கையில் பண்டிகையை முன்னிட்டு மேலும் 50 விசேட பேருந்துகள் சேவையில்!
நாட்டில் எதிர்வரும் பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த தகவலை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேலதிகமாக 50 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேருந்து சேவைகள் நாளையதினம் (24-12-2024) முதல் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.