இலங்கை

எம்.பி சாணக்கியன் சகோதரனின் மதுபானசாலையில் இடம்பெற்ற சம்பவம்… மூவர் வைத்தியசாலையில்!

Published

on

எம்.பி சாணக்கியன் சகோதரனின் மதுபானசாலையில் இடம்பெற்ற சம்பவம்… மூவர் வைத்தியசாலையில்!

திருகோணமலையில் உள்ள மூதூர் இருதயபுர மதுபானசாலையில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (22.12.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் மூதூரைச் சேர்ந்த 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோப்பூரை சேர்ந்த பல குற்றவாளிகள் ஒன்றிணைந்து குறித்த மூவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், வாள்வெட்டு சம்பவம் அங்கியிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகிய நிலையில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்த மதுபானசாலை சாணக்கியனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மதுபான சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version