இலங்கை
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு!
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு!
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேச செயலகம் உரும்பிராய் தெற்கு பிரதேசத்தில் உள்ள ஜே/265 கிராம அலுவலகர் பிரிவான யோகபுரம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 157 குடும்பங்களுக்கு, வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 7லட்சத்து 85ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் யோகபுரம் அண்ணா சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அண்ணா சனசமூக நிலைய தலைவர் ச.ரவீன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இவ்வுதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் மற்றும் தொண்டர்கள், மருத்துவர் செந்தில்குமரன் ஆகியோர் கலந்துகொண்டார். (ச)