இலங்கை

பிணையில் விடுவிக்கப்பட்ட சலிது மல்ஷிக குணரத்னவை மீண்டும் கைது செய்த உத்தரவு!

Published

on

பிணையில் விடுவிக்கப்பட்ட சலிது மல்ஷிக குணரத்னவை மீண்டும் கைது செய்த உத்தரவு!

“குடு சலிந்து” என அழைக்கப்படும் சலிது மல்ஷிக குணரத்னவை கைது செய்யுமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட சலிது மல்ஷிக குணரத்னவை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

Advertisement

எனினும் அவர் நேற்றையதினம் (22-12-2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றையதினம் (23-12-2024) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

குறித்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான் நீதிமன்றம் “குடு சலிந்து”வை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version