இலங்கை

பெண்ணொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய இருவர் கைது!

Published

on

பெண்ணொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய இருவர் கைது!

தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய இரு சந்தேக நபர்களை மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 கடந்த 4ஆம் திகதி களனி, திப்பிட்டிகொட பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வியாபாரி ஒருவர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.

Advertisement

 இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

 இதன்படி, இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் நேற்று (22) காலை கிரிபத்கொட, டலுகம பிரதேசத்திலும், பேலியகொட, பட்டிய சந்தி பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 53 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள். 

Advertisement

 மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version