இலங்கை
முதலை தாக்கி பெண் சாவு- வவுனியாவில் சம்பவம்!
முதலை தாக்கி பெண் சாவு- வவுனியாவில் சம்பவம்!
வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்;
மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் – சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாரால் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (ச)