இலங்கை

யாழில் கரையொதுங்கிய மர்மபடகு

Published

on

யாழில் கரையொதுங்கிய மர்மபடகு

யாழ் வடமராட்சி கிழக்கு,உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் மர்மபடகு ஒன்று இன்று(23) காலை கரையொதுங்கியுள்ளது.

OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு ஆட்கள் யாருமற்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

படகு தொடர்பில் அதிகரிகளுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர் மற்றும் பொலிசார் படகை பார்வையிட்டதுடன் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து கரையொதுங்கிய இலங்கை படகை கடத்தல்காரர்கள் கையாண்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளயிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version