இலங்கை

யாழில் டெங்கு நோய் அதிகரிப்பு!

Published

on

யாழில் டெங்கு நோய் அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் டிசெம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, “யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது. இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசெம்பர் மாதத்தில் 91 பேரும் டெங்குத் தொற்றுக்கு உட்பட்டுள்ளனர். 

Advertisement

எனவே, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுவது அவசியம்.” – என்றார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version