இலங்கை
கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட தயாராகி வரும் யாழ்ப்பாண மக்கள்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட தயாராகி வரும் யாழ்ப்பாண மக்கள்!
உலகளவில் உள்ள கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் பண்டிகை காணப்படுகிறது.
இந்நிலையில், இன்றையதினம் (24-12-2024) நள்ளிரவு உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் யேசு பாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இதன்படி, யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் உள்ள கடைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை குடில்கள், சவுக்குமரக் கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை அதிகளவிலான மக்கள் கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.