இலங்கை

தமிழர் பகுதியில் திருட்டுச் சம்பவங்கள்… பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Published

on

தமிழர் பகுதியில் திருட்டுச் சம்பவங்கள்… பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

அம்பாறையில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை பொலிஸார் கோரியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் சமீபக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வருகின்றன.

Advertisement

இச்சம்பங்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை இனங்கண்டிருந்தனர்.

மேலும் பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குறித்த சந்தேக நபர் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version