இலங்கை

பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகமாகும் விசேட போக்குவரத்து திட்டம்!

Published

on

பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகமாகும் விசேட போக்குவரத்து திட்டம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டுஇ பல பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது இதன்படி நாளை முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க  இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்டிகைக் காலம் முடியும் வரை தினமும் 50 பேருந்துகள் அதிகாமாக இயக்கப்பட உள்ளதாகவும்   தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

Advertisement

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துககளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கிராமங்களுக்குத் திரும்பிய மக்கள் கொழும்புக்கு வருவதற்காக பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் பண்டிகை காலத்தையொட்டி சில சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version