இலங்கை

பாடசாலை ஆசிரியர்களுக்கு விசேட அறிவிப்பு!

Published

on

பாடசாலை ஆசிரியர்களுக்கு விசேட அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேல்மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடைவிதித்து கடந்த வெள்ளிக்கிழமை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்

சுற்றறிக்கைக்கு ஆட்சேபனைகள் எழுந்ததையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version