இலங்கை

மின்கம்பியில் சிக்கி ஒருவர் தொழிலாளி உயிரிழப்பு

Published

on

மின்கம்பியில் சிக்கி ஒருவர் தொழிலாளி உயிரிழப்பு

நிக்கொல்லாவ பிரதேசத்தில் 25 ஏக்கர் நெற்செய்கை நிலத்தில் அனுமதியற்ற மின்கம்பியில் சிக்கி தோட்டத்தில் பணியாற்றிய கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்கொல்லாவ, கிராமப் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மின்கசிவு காரணமாக தெவஹுவ கல்பாயவில் வசித்து வந்த வி.செல்டன் பேமசிறி குமார என்ற 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் தனது தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அப்பகுதியைச் சுற்றி யானை வேலி அமைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தோட்டத்தில் வேலை செய்ய இரண்டு கூலி ஆட்களை நியமித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version