இலங்கை

யாழ்.பலாலி இராணுவ முகாமில் திடீரென உயிரிழந்த இராணுவ அதிகாரி!

Published

on

யாழ்.பலாலி இராணுவ முகாமில் திடீரென உயிரிழந்த இராணுவ அதிகாரி!

யாழ்ப்பாணம் – பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய சார்ஜன் தர அதிகாரி ஒருவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருநாகலைச் சேர்ந்த 35 வயதான ரவித்த ரங்கன திசாநாயக்க எனும் 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2007 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட அவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (22-12-2024) காலை நெஞ்சுவலி காரணமாக பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி நண்பகல் உயிரிழந்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version