இலங்கை

வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள் – களத்தில் இறங்கிய அதிகாரிகள்!

Published

on

வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள் – களத்தில் இறங்கிய அதிகாரிகள்!

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச சபையினால்  கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.

கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல்இ விபத்துக்களை குறைக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் இந்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 1000 ரூபா தண்டப்பணம் 1000 ரூபா, ஏற்றியிறக்கல்  500 ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 250 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 250 ரூபா விதிக்கப்படுமென பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version