இந்தியா

2024-25 நிதியாண்டு: வணிகவரித்துறை வருவாய் இத்தனை கோடியா?  

Published

on

2024-25 நிதியாண்டு: வணிகவரித்துறை வருவாய் இத்தனை கோடியா?  

வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதியாண்டில் டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, தலைமையில் நேற்று (டிசம்பர் 24) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisement

இக்கூட்டத்தில் மறைந்த வணிகர்களின் குடும்பத்தினரான திருத்துறைப்பூண்டி பா.சுசிலா, ராசிபுரம் யு.கஸ்தூரி மற்றும் திருவண்ணாமலை வி.விஜயலட்சுமி ஆகிய மூன்று நபர்களுக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3,00,000 காசோலையை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் 23.12.2024 வரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வரி வருவாய் வளர்ச்சியில் இந்திய அளவில் தற்போது தமிழ்நாடு மாநிலம் முதன்மையாக விளங்குகிறது. வரும் மாதங்களிலும் அனைத்து இணை ஆணையர்களும் மேலும் சிறப்புடன் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version