உலகம்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அதிரடி தாக்குதல்; 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Published

on

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அதிரடி தாக்குதல்; 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 26/12/2024 | Edited on 26/12/2024

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது.

அதே சமயம், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தாலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு இருப்பதாகவும், அந்த அமைப்பு தங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருவதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதை தொடர்ந்து, அந்த அமைப்பை குறித்து பாகிஸ்தான் அவ்வப்போது  தாக்குதல் நடத்தி வருகிறது. 

Advertisement

இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில்  நேற்று முன் தினம் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அதிரடி தாக்குதல்; 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

  • மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்! 

  • அண்ணா பல்கலை. கொடூரம்; கைதான ஞானசேகரனுக்கு மாவுக்கட்டு!

  • “நெல்லையில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?” – ஆட்சியர் விளக்கம்!

  • வெம்பக்கோட்டை அகழாய்வு; அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version